நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் மேலதிக இராணுவத்தினர் நேற்று மாலை களமிறக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஆலய திருவிழாவை ஒட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்றுமில்லாதவாறு இம்முறை பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆலய நுழைவாயில்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் உடல் சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பொலிஸாருடன் இராணுவத்தினரும் இணைந்து ஆலயச் சூழலில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மேலதிக இராணுவ அணி ஒன்று நல்லூரில் களமிறக்கப்பட்டது. நேற்று கொண்டுவந்து இறக்கப்பட்ட இராணுவ அணியினர் தற்காலிக கூடாரங்களையும் தம்முடன் எடுத்து வந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.